1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!
Mar 15, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் இத்ரீஸ், என்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஜமேஷா முபின், நிகழ்விடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து முதலில் கோவை காவல்துறையின் விசாரித்து வந்த நிலையில், பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள் 12 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விசாரணையின்போது, இத்ரீஸ் அளித்த வாக்குமூலத்தில், “வெடிகுண்டு தயாரிக்க ஜமேஷா முபின் எங்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை குனியமுத்தாரில் உள்ள அரபிக் கல்லுாரியை எங்கள் தீவிரவாத பயிற்சி வகுப்புக்கு பயன்படுத்திக் கொண்டோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசியக் கூட்டம் நடத்துவோம். அங்குதான் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுத பயிற்சிகள் எடுத்தோம்.

மேலும், சமூக வலைதளம் வாயிலாக இந்து மதம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளுடன் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வலை விரித்தோம். அவர்களிடம் இனம் புரியாத வேகம் இருக்கும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். ஓராண்டில் 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பணிபுரிந்து வந்தோம். ஆனால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் மீது ஜமேஷா முபின் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. இது வெற்றி பெற்றிருந்தால் அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகி இருப்போம்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: NiakovaiCar Blast
ShareTweetSendShare
Previous Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Next Post

காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies