1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!
Jul 29, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் இத்ரீஸ், என்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஜமேஷா முபின், நிகழ்விடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து முதலில் கோவை காவல்துறையின் விசாரித்து வந்த நிலையில், பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள் 12 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விசாரணையின்போது, இத்ரீஸ் அளித்த வாக்குமூலத்தில், “வெடிகுண்டு தயாரிக்க ஜமேஷா முபின் எங்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை குனியமுத்தாரில் உள்ள அரபிக் கல்லுாரியை எங்கள் தீவிரவாத பயிற்சி வகுப்புக்கு பயன்படுத்திக் கொண்டோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசியக் கூட்டம் நடத்துவோம். அங்குதான் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுத பயிற்சிகள் எடுத்தோம்.

மேலும், சமூக வலைதளம் வாயிலாக இந்து மதம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளுடன் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வலை விரித்தோம். அவர்களிடம் இனம் புரியாத வேகம் இருக்கும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். ஓராண்டில் 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பணிபுரிந்து வந்தோம். ஆனால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் மீது ஜமேஷா முபின் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. இது வெற்றி பெற்றிருந்தால் அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகி இருப்போம்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: NiakovaiCar Blast
ShareTweetSendShare
Previous Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Next Post

காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies