ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் "இண்டி" கூட்டணி: பிரதமர் மோடி கடும் தாக்கு!
Aug 15, 2025, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் “இண்டி” கூட்டணி: பிரதமர் மோடி கடும் தாக்கு!

உலகளவில் இந்தியா பாராட்டப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி இருக்கும் நிலையில், “இண்டி” கூட்டணி ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்துகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால். இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பா.ஜ.க. அறிவித்து விட்டது. மீதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 19,260 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை “இரட்டை எஞ்சின்” என்று எதிர்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். “இரட்டை எஞ்சின்” இருப்பது நல்லதுதான். ஏனெனில், இதன் மூலம் மாநிலம் இரட்டை வளர்ச்சியைக் காண முடியும்.

பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “இண்டி” கூட்டணியிடம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமோ அல்லது வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையோ கிடையாது. உலகளவில் இந்தியா பாராட்டப்படுவதை எதிர்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பின்தங்கிய நிலையில் இருந்த மத்தியப் பிரதேச மாநிலம் இன்று வளர்ச்சிப் பட்டியலில் 10-ம் இடத்தில் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். மத்தியப் பிரதேசத்தை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டும் மிகவும் முக்கியமானது.

அன்று உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று  5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வளர்ச்சியை எதிர்க்கும் எதிர்கட்சிகள் இது நடக்கவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள். எனினும், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கும் நிலையில், “இண்டி” கூட்டணியினர் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்துகிறார்கள்.

இதன் மூலம் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கிறார்கள். நாட்டு மக்கள் வளர்ச்சியை எதிர்த்தவர்களுக்கு 60 ஆண்டுகள் கொடுத்திருக்கிறார்கள். 60 ஆண்டுகள் என்பது குறைவான காலம் அல்ல. 9 ஆண்டுகளில் நாட்டில் இவ்வளவு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுத்த முடியுமானால், 60 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. இது அவர்களது தோல்வியைக் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

நிர்மலா சீதாராமனிடம் கோவை தொழில்துறைகளின் கோரிக்கைகளை வழங்கிய அண்ணாமலை!

Next Post

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் நினைவு தினம்!

Related News

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies