டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!
Jan 14, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்து, புதிய மதுபானக் கொள்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய கொள்கை தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் மூலம், ஆம் ஆத்மி அரசு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ., டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சஞ்சய் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, மணீஷ் சிசோடியா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூவிடம், இந்த வழக்கில் ஒரு அரசியல் கட்சி ( ஆம் ஆத்மி) பலனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்சி இன்னும் குற்றவாளியாக்கப்படவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு காரணமாக, அமைச்சரவை குறிப்புகளை ஆய்வு செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. இது யூனியன் பிரதேசமான டெல்லிக்குப் பொருந்துமா என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. இத்தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.

Tags: aam aadmi partydelhidelhi liquor scam
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை: அக்.31க்கு ஒத்திவைப்பு!

Next Post

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies