டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!
Jul 26, 2025, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்து, புதிய மதுபானக் கொள்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய கொள்கை தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் மூலம், ஆம் ஆத்மி அரசு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ., டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சஞ்சய் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, மணீஷ் சிசோடியா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூவிடம், இந்த வழக்கில் ஒரு அரசியல் கட்சி ( ஆம் ஆத்மி) பலனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்சி இன்னும் குற்றவாளியாக்கப்படவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு காரணமாக, அமைச்சரவை குறிப்புகளை ஆய்வு செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. இது யூனியன் பிரதேசமான டெல்லிக்குப் பொருந்துமா என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. இத்தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.

Tags: aam aadmi partydelhidelhi liquor scam
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை: அக்.31க்கு ஒத்திவைப்பு!

Next Post

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies