டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!
Apr 29, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்து, புதிய மதுபானக் கொள்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய கொள்கை தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் மூலம், ஆம் ஆத்மி அரசு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ., டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சஞ்சய் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, மணீஷ் சிசோடியா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூவிடம், இந்த வழக்கில் ஒரு அரசியல் கட்சி ( ஆம் ஆத்மி) பலனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்சி இன்னும் குற்றவாளியாக்கப்படவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு காரணமாக, அமைச்சரவை குறிப்புகளை ஆய்வு செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. இது யூனியன் பிரதேசமான டெல்லிக்குப் பொருந்துமா என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. இத்தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.

Tags: aam aadmi partydelhidelhi liquor scam
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை: அக்.31க்கு ஒத்திவைப்பு!

Next Post

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies