டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!
Sep 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்து, புதிய மதுபானக் கொள்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய கொள்கை தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் மூலம், ஆம் ஆத்மி அரசு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ., டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சஞ்சய் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, மணீஷ் சிசோடியா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூவிடம், இந்த வழக்கில் ஒரு அரசியல் கட்சி ( ஆம் ஆத்மி) பலனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்சி இன்னும் குற்றவாளியாக்கப்படவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு காரணமாக, அமைச்சரவை குறிப்புகளை ஆய்வு செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. இது யூனியன் பிரதேசமான டெல்லிக்குப் பொருந்துமா என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. இத்தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.

Tags: aam aadmi partydelhidelhi liquor scam
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை: அக்.31க்கு ஒத்திவைப்பு!

Next Post

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies