கோடியக்கரை: திடீரென்று உருவாகிய மணல் குன்றுகள் - காரணம் என்ன?
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடியக்கரை: திடீரென்று உருவாகிய மணல் குன்றுகள் – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடியக்கரைக் கடற்கரை பகுதியில் வீசி வரும் சூறைக்காற்றின் காரணமாக, கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் கடந்த நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் 2-வது நாளாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 100-க்கும் மேற்பட்ட படகுகளைக் கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறைக் காற்று காரணமாக, சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது. திடீரென்று உருவான மணல் குன்றுகளால், அப்பகுதியில் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், கடற்கரையில் மீனவர்கள் வைத்துள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது.

கோடியக்கரையில் மீன் பிடி சீசன் தொடங்கியவுடன் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, இராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து, மீன் பிடித்து விற்பனை செய்வர்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் தற்போது வழக்கத்துக்கு மாறாக வீசும் இந்த காற்றால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சீசன் காலம் தொடங்க இன்னும் இரு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

Tags: tamilnaduSand dunes formed suddenly
ShareTweetSendShare
Previous Post

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Next Post

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies