நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!
Aug 15, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!

உலகத் தலைவர்களால் பாராட்டப்படுவதாகவும் உரை!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், உலகத் தலைவர்களால் பாராட்டப்படும் நபராக பிரதமர் மோடி வலம் வருகிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நாம் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, ​​தேசியப் பிரச்சனைகளை எழுப்புவதிலும், அவற்றைத் தீர்ப்பதிலும் நமது கட்சி வலுவாகவும், மற்றவர்களை விடவும் முன்னணியில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றன. ஆகவே, நம்மைப் பற்றியும், நமது அரசுகள் பற்றியும் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்கத் தெளிவான பதிலைத் தரத் தயாராக இருக்க வேண்டும்.

தெலங்கானாவில் உள்ள எந்தக் கிராமத்துக்கும் நமது நிர்வாகிகள் சென்று வளர்ச்சித் தேவைகளுக்கு பதில் சொல்லலாம் என்பதை தயக்கமின்றி என்னால் கூற முடியும். காரணம், தேசமும், தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களும் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உழைத்துள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமது வெற்றி தெலங்கானாவிலும் தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் உலகளாவிய மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது. மேலும், நாட்டின் பலமே நமது பிரதமர் நரேந்திர மோடிதான். பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான பிரதமரின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சிகள் நமது நாட்டிற்கு மேலும் மேலும் வலு சேர்க்கின்றன.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 70 சதவீதத்தை கொண்டுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இந்த 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 2 கோடி பேர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில், 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjpJ.P.NaddaTelangana
ShareTweetSendShare
Previous Post

மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!

Next Post

இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

Related News

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies