நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!
Aug 8, 2026, 01:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!

உலகத் தலைவர்களால் பாராட்டப்படுவதாகவும் உரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், உலகத் தலைவர்களால் பாராட்டப்படும் நபராக பிரதமர் மோடி வலம் வருகிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நாம் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, ​​தேசியப் பிரச்சனைகளை எழுப்புவதிலும், அவற்றைத் தீர்ப்பதிலும் நமது கட்சி வலுவாகவும், மற்றவர்களை விடவும் முன்னணியில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றன. ஆகவே, நம்மைப் பற்றியும், நமது அரசுகள் பற்றியும் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்கத் தெளிவான பதிலைத் தரத் தயாராக இருக்க வேண்டும்.

தெலங்கானாவில் உள்ள எந்தக் கிராமத்துக்கும் நமது நிர்வாகிகள் சென்று வளர்ச்சித் தேவைகளுக்கு பதில் சொல்லலாம் என்பதை தயக்கமின்றி என்னால் கூற முடியும். காரணம், தேசமும், தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களும் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உழைத்துள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமது வெற்றி தெலங்கானாவிலும் தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் உலகளாவிய மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது. மேலும், நாட்டின் பலமே நமது பிரதமர் நரேந்திர மோடிதான். பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான பிரதமரின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சிகள் நமது நாட்டிற்கு மேலும் மேலும் வலு சேர்க்கின்றன.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 70 சதவீதத்தை கொண்டுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இந்த 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 2 கோடி பேர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில், 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjpJ.P.NaddaTelangana
Share
Tweet
SendShare
Previous Post

மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!

Next Post

இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies