பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?
Jul 4, 2025, 11:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Oct 8, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் திடீரென ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடிவிபத்தில், 14 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, நவீன்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடை உள்ளது. அதில், தீபாவளி பண்டிகையையொட்டி,
பட்டாசு விற்பனை செய்ய கடை அமைத்து வந்தனர். இதில், வாணியம்பாடி, அரூர் டி. அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று கடைக்கு ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதில், தீப்பொறி கடைக்குள் விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துத் தீப்பிடித்து எரிந்தன. காற்றில் தீ மளமளவென சரக்கு வாகனங்களிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவியது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 2 பேர் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டது. தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த சச்சின் மற்றும் வேடியப்பன் ஆகியோர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில், கடை உரிமையாளர் நவீன உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் ஒரு ஒரு கன்டெய்னர் லாரி, 3 சரக்கு வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடை நடத்த உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது விதி மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Fire accident14 killed in fire cracker shop blast
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

Next Post

கோவை: உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள் – நடந்தது என்ன?

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies