சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!
Jul 23, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!

தொடரும் தாக்குதல்!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூடானில் நடந்து வரும் 6 மாதப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியிருக்கும் நிலையில், கார்ட்டூமுக்கு தெற்கே ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். சிறிய நகரத்தில் பொதுமக்களின் வீடுகளுக்குள் குண்டுகள் விழுந்தன என்று உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது.

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே போர் மூண்டது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரில் இதுவரை 9,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஆனாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

இப்போர் பெரும்பாலும் கார்ட்டூம் மற்றும் டார்ஃபரின் மேற்குப் பகுதியில்தான் நடந்து வருகிறது. இதன் காரணமாக, சூடானுக்குள் சுமார் 4.3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மேலும், சுமார் 1.2 லட்சம் மக்கள் எல்லைகளைத் தாண்டி வெளியேறி விட்டனர். சமீபத்திய வாரங்களில் இப்போர் தெற்கே நகர்ந்திருக்கிறது. இதனால், தலைநகருக்குத் தெற்கே உள்ள அல் ஜசிரா மாநிலத்தில் தஞ்சம் புகுந்த 3.66 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சூழலில், ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நகரத்திற்கு தெற்கே 50 கி.மீ. (31 மைல்) தொலைவில் உள்ள சிறிய நகரத்தில் இக்குண்டுகள் வீடுகளுக்குள் விழுந்ததாக உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது. போர் தொடங்கியதில் இருந்து இக்குழுவினர்தான் பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர்.

Tags: WARSudan9000 killed
ShareTweetSendShare
Previous Post

விராட் கோலியின் புதிய சாதனை !

Next Post

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies