ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!
Jul 4, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகு-கேது பெயர்ச்சி பெயர்ச்சியையொட்டிதிருநாகேஸ்வரத்தில் ராகு பகவனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இன்று மாலை 3.40 மணிக்கு மேல் ராகு பகவான் மேஷத்திலிருந்து இருந்து மீனம் ராசிக்கு மாறினார். இதேபோல கேது பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு மாறினார்.

இந்த ராகு-கேது கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி செல்லக்கூடிய ராசிகளாகும். இந்த பெயர்ச்சியின் காரணமாக, ராகு பகவான், குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். வரும் 25.04.2025-ம் தேதி வரை இந்த ராசிகளில் சஞ்சாரம் செய்கின்றனர்.

ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவில். இந்த கோவிலில் சிவபெருமானை நாக அரசராகிய இராகு பூஜித்தமையால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.

அப்படி பெருமை வாய்ந்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளி அருட்காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோவிலில் உள்ள ராகு பகவான் மீது பால் ஊற்றினால், பால் நீல நிறத்தில் காட்சி தரும்.

இந்த நிலையில், இன்று ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அிதகாலை முதலே வருகை தந்து, வரிசையில் நின்று மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, சுவாமிக்குப் பால், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராகு பகவனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகச் சுவாமி செய்தனர்.

ராகு – கேது பெயர்ச்சியை யொட்டி, கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags: Rahu-Ketu Transit: Special Prayer at Thirunageswaram!
ShareTweetSendShare
Previous Post

சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!

Next Post

2032-ல் இந்திய விமானப்படை நம்பர் 1 ஆக இருக்கும்!

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies