சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!
Aug 24, 2026, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!

தொடரும் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 04:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூடானில் நடந்து வரும் 6 மாதப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியிருக்கும் நிலையில், கார்ட்டூமுக்கு தெற்கே ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். சிறிய நகரத்தில் பொதுமக்களின் வீடுகளுக்குள் குண்டுகள் விழுந்தன என்று உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது.

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே போர் மூண்டது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரில் இதுவரை 9,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஆனாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

இப்போர் பெரும்பாலும் கார்ட்டூம் மற்றும் டார்ஃபரின் மேற்குப் பகுதியில்தான் நடந்து வருகிறது. இதன் காரணமாக, சூடானுக்குள் சுமார் 4.3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மேலும், சுமார் 1.2 லட்சம் மக்கள் எல்லைகளைத் தாண்டி வெளியேறி விட்டனர். சமீபத்திய வாரங்களில் இப்போர் தெற்கே நகர்ந்திருக்கிறது. இதனால், தலைநகருக்குத் தெற்கே உள்ள அல் ஜசிரா மாநிலத்தில் தஞ்சம் புகுந்த 3.66 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சூழலில், ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நகரத்திற்கு தெற்கே 50 கி.மீ. (31 மைல்) தொலைவில் உள்ள சிறிய நகரத்தில் இக்குண்டுகள் வீடுகளுக்குள் விழுந்ததாக உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது. போர் தொடங்கியதில் இருந்து இக்குழுவினர்தான் பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர்.

Tags: WARSudan9000 killed
Share
Tweet
SendShare
Previous Post

விராட் கோலியின் புதிய சாதனை !

Next Post

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

Related News

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies