இஸ்ரேல் மீதான போர் !
Jul 23, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீதான போர் !

Web Desk by Web Desk
Oct 9, 2023, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீதான காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

“அல் அஸ்கா புயல்” என்கிற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது காஸா தன்னாட்சி நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். வெறும் 30 நிமிடங்களில் 7,000 ஏவுகணைகளை ஏவியதால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமான இஸ்ரேல் இராணுவத்தினரையும், அப்பாவி பொதுமக்களையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, காஸாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வரும் ஈரான் நாடு, இஸ்ரேல் மீதான தாக்குதல் பெருமைமிக்க நடவடிக்கை என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் யஹ்யா ரஹீம் ஸஃபாவி கூறுகையில், “அல் அக்ஸா புயல் தாக்குதலை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஒரு பெருமைமிக்க நடவடிக்கை” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, ஈரான் வெளியுறவு அமைச்சகம் இத்தாக்குதலை பாராட்டி இருக்கிறது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, “இன்றைய நடவடிக்கையானது ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் ஆயுதமேந்திய நடவடிக்கைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கையின்போது அற்புதமான வெற்றிகளை அடைந்திருக்கிறது. மேலும், இது சியோனிஸ்டுகளுக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களின் போராட்ட வரலாற்றில் ஒரு பிரகாசமான இடமாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதேபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளும் குரல் கொடுத்திருக்கின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கின் நீடித்த அமைதிக்காக, போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக சர்வதேச சமூகம் ஒன்று சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். பாலஸ்தீன பிரச்சனைக்கு சர்வதேச சட்டத்தில் தொகுக்கப்பட்ட மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களுக்கு இணங்க ஒரு நியாயமான, விரிவான மற்றும் நீடித்த தீர்வு தேவை. 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், அல் குத்ஸ் அல்-ஷரீப்பை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸா பகுதியில் சமீபத்திய நிகழ்வுகளை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை மிதித்து அவமதிப்பு செய்ததன் விளைவாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கிறது. முஸ்லீம்களின் புனித இடங்கள் அவமரியாதை செய்யப்படுவதற்கான பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பு இது” என்று தெரிவித்திருக்கிறது.

கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அல் அக்ஸா மசூதிக்குள் மீண்டும் ஊடுருவல் நடத்தப்பட்டு, பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீறுயதால் ஏற்பட்ட விளைவு இது. இதற்கு இஸ்ரேல் மட்டுமே பொறுப்பு. சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்களை நிறுத்தவும், பாலஸ்தீனிய மக்களின் வரலாற்று உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், இந்த நிகழ்வுகளை சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இஸ்ரேலை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் அவசரமாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: WARIsraelMuslim CountriesSupport kaza
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!

Next Post

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா !

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies