திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!
Aug 26, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதாவது, இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியம்கிராம் நகராட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக பதவி வகித்தார்.

அப்போது, உள்ளாட்சி அமைப்பில் காலியாக இருந்த பணியிடங்களில் 1,500 பேரை சட்டவிரோதமாக பணி அமர்த்தியதாக, ரதின் கோஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவருக்குச் சொந்தமான 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் மற்றொரு அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி இருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில்தான் இச்சோதனை நடந்திருக்கிறது. இவர், கொல்கத்தா மேயராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்கள் சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவரது வீடு தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் மத்தியப் படைகளின் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், 2 சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சரிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மதன் மித்ரா வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவர் மீது கமர்ஹாட்டி நகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது விசாரணையில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்குவங்க மாநில அமைச்சர்கள் 2 பேர், எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: cbiMinisterwest bengalMLARaid
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு!

Next Post

இஸ்ரேல் மீதான போர் !

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies