வரும் 2024 -மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்தி பாஜகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிகார் தலைநகரம் பாட்னாவில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசும்போது, வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவார், மோடி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம், கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், நாடு முழுவதும் பாஜகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேங்க்யூ மோடி ஜி எனக் கொண்டி வருகின்றனர்.
மேலும், பாஜகவில் உறுப்பினர் அல்லாத டாக்டர், வழக்கறிஞர், ஆசிரியர்கள் என சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி வருகின்றனர். இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ”நன்றி மோடி ஜி” எனக் கொண்டாடி வருகின்றனர்.