திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதாவது, இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியம்கிராம் நகராட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக பதவி வகித்தார்.

அப்போது, உள்ளாட்சி அமைப்பில் காலியாக இருந்த பணியிடங்களில் 1,500 பேரை சட்டவிரோதமாக பணி அமர்த்தியதாக, ரதின் கோஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவருக்குச் சொந்தமான 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் மற்றொரு அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி இருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில்தான் இச்சோதனை நடந்திருக்கிறது. இவர், கொல்கத்தா மேயராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்கள் சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவரது வீடு தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் மத்தியப் படைகளின் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், 2 சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சரிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மதன் மித்ரா வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவர் மீது கமர்ஹாட்டி நகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது விசாரணையில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்குவங்க மாநில அமைச்சர்கள் 2 பேர், எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: RaidcbiMinisterwest bengalMLA
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு!

Next Post

இஸ்ரேல் மீதான போர் !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies