திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!
Jul 24, 2025, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதாவது, இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியம்கிராம் நகராட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக பதவி வகித்தார்.

அப்போது, உள்ளாட்சி அமைப்பில் காலியாக இருந்த பணியிடங்களில் 1,500 பேரை சட்டவிரோதமாக பணி அமர்த்தியதாக, ரதின் கோஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவருக்குச் சொந்தமான 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் மற்றொரு அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி இருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில்தான் இச்சோதனை நடந்திருக்கிறது. இவர், கொல்கத்தா மேயராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்கள் சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவரது வீடு தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் மத்தியப் படைகளின் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், 2 சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சரிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மதன் மித்ரா வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவர் மீது கமர்ஹாட்டி நகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது விசாரணையில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்குவங்க மாநில அமைச்சர்கள் 2 பேர், எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: cbiMinisterwest bengalMLARaid
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு!

Next Post

இஸ்ரேல் மீதான போர் !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies