இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற 10-வது இந்தியா-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

இரு தரப்பு நிறுவனங்களும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மனித வளப் பரிமாற்றத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை  அவர் வலியுறுத்தினார்.

பசுமைத் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு, ஒன்பது ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியா – ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு  விரைவுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வருகை தந்தன என்று  தெரிவித்தார். இதன் மூலம் இந்தத் துறையில் ஸ்வீடனுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான உறவுகள் ஏற்படும் என்று  குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகள் ஏற்பட்ட 75 வது ஆண்டு நிறைவையும், நிலையான எதிர்காலத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்பு கூட்டுச் செயல்பாடு குறித்த ஸ்வீடன்-இந்தியா கூட்டுப் பிரகடனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகின்றன  என்று குறிப்பிட்டார்.

நவீன நகரங்கள், போக்குவரத்து மற்றும் மின்சார வாகன இயக்கம், எரிசக்தி, தூய்மைத்  தொழில்நுட்பங்கள், புதிய பொருட்கள், விண்வெளி, சுழற்சி மற்றும் உயிரியல் அடிப்படையிலான பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளை இந்தக் கூட்டு செயல்பாடு உள்ளடக்கியது என்று கூறினார்.

மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்தவும், கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.

Tags: jitendra singhjitendra singh Speechcentral goverment
ShareTweetSendShare
Previous Post

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

Next Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies