மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!
Jan 14, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச செலவாணி நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டங்கள் 2023-ல் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மொராக்கோவின் மராகேச் நகருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10.10.2023 முதல் மொராக்கோவின் மராகேச் நகருக்கு உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு (டபிள்யூபிஜி) மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இந்த வருடாந்திர கூட்டங்களில் உலகெங்கிலும் இருந்து நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொள்வார்கள். வழக்கமாக அக்டோபரில் நடைபெறும் வருடாந்திர கூட்டங்கள் வாஷிங்டன் டி.சி.யில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும், மூன்றாவது ஆண்டில் மற்றொரு உறுப்பு நாட்டிலும் நடத்தப்படுவது வழக்கம்.

வருடாந்திர கூட்டங்களுக்கான இந்திய தூதுக்குழுவுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் தலைமை தாங்குவார். இதில் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.

நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எஃப்.எம்.சி.பி.ஜி) கூட்டத்திற்கு நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர்  சக்திகாந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் இரண்டு அமர்வுகளைக் கொண்டிருக்கும்:-

21 -ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளை (MDB) பலப்படுத்துதல் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் நிர்வாகம் என்ற இரண்டு அமர்வுகள் அதில் இடம்பெறும்.

‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ என்ற  இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ கருப்பொருளின் கீழ், 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட நிதி வழிமுறைகளின் கீழ் அடையப்பட்ட முக்கிய விளைவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central govermentnirmala seetharaman
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Next Post

திமுக காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்திவருகிறது!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies