புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!
Mar 15, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளன.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருநாடுகளுக்கு இடையே முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், தமது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, சவூதி முதலீட்டு அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹ் உடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், சவூதி வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய  சிங், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து முக்கிய வணிக நிறுவனங்களும் கூட்டத்தில் பங்கேற்றன.

சவூதி அரேபிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யக்கூடிய மின்துறை குறித்து இன்வெஸ்ட் இந்தியா ஒரு சுருக்கமான விளக்கக்காட்சிப்படுத்தப்பட்டது. மின் உற்பத்தி திட்டங்கள், எரிசக்தி சேமிப்பு, மின்சாரப் பரிமாற்றம், பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டன.

ஆர்.கே. சிங் தூதுக்குழுவுடன் ரியாதில் உள்ள சுதைர் சூரிய மின்சக்தி நிலையத்தையும் பார்வையிட்டார். இந்த ஆலை சவூதி அரேபியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையாகும். மேலும் இந்தப் பணி ஒரு இந்திய நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 08 அன்று, மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க துறை அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பருவநிலை வாரம் 2023-ன் உயர் மட்டற்ற நிலைப் பிரிவில் இந்திய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பிராந்தியத்தில் எரிசக்தி மாற்றத்தை மேம்படுத்துதல் என்ற உயர் நிலை அமைச்சர்கள் குழுவில் ஆர்.கே.சிங் பங்கேற்றார்.

ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோருக்கு இடையே மின் இணைப்புகள், பசுமை தூய்மையான ஹைட்ரஜன், விநியோக அமைப்புகள் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின் இணைப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: R.K. SinghIndia and Saudi Arabia decide to encourage investment in renewable energy!
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

Next Post

சென்னை: 9 மாதத்துக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies