நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கழிவுகளை சிற்பங்களாக மாற்றியுள்ளது.

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்) தூய்மைப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு படி மேலே சென்று, நிலக்கரி சுரங்கக் கழிவுப் பொருட்களை அழகான சிற்பங்களாக மாற்றி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தூய்மையை மையமாகக் கொண்டு, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கழிவுப்பொருட்களை குறைக்கும் வகையில் சிறப்பு இயக்கம் 3.0 நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. பயன்படுத்த முடியாத  அளவுக்கு பயனற்ற கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதும் இந்தப் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும்.

எஸ்.இ.சி.எல்லின் ஜமுனா கோட்மா பகுதி சிறப்பு இயக்கம் 3.0 செயல்பாடுகளின் கீழ் “கழிவிலிருந்து சிற்பம் வரை” என்ற முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி சுரங்கங்களின் கழிவுப் பொருட்களை பல்வேறு படைப்பு சிற்பங்களாக மாற்றுவதாகும்.

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோட்மா பகுதியில் உள்ள பங்கிம் விஹார் என்ற இடத்தில் நிலக்கரி  சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட இந்தச் சிற்பங்களைக் காட்சிப்படுத்த பொதுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நிறுவப்பட்ட சிற்பங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளி, சிங்கம், கொக்கு பறவை, பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிற்பங்கள் கோட்மா நிலக்கரி சுரங்கத்தின் பிராந்திய பட்டறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன, மேலும் இந்த சிற்பங்களை வடிவமைப்பதில் ஏராளமான பெண் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

நடப்பு சிறப்பு இயக்கம் 3.0-ன் போது, நிலக்கரி பொதுத்துறை நிறுவனம் ஏற்கனவே சுமார் 1344 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ரூ.7 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sculptures made from coal mine waste!
ShareTweetSendShare
Previous Post

வலுவான தொழில் கல்வி ஒத்துழைப்பை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! – கேமராவில் சிக்கியக் காட்சி!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies