இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நிகழ்ந்து வரும் போரில், தீவிரவாதிகளுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 4 நாட்கள் முடிந்து 5 -வது நாளாகப் கடும் போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பு இடையே கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் குழுவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், உரிமை கேட்டுப் போராடும் பாலஸ்தீன மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை தனது ஆதரவை வழங்குகிறது. இருப்பினும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாட்டை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கானத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காங்கிரஸ் தனது முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு எனத் தெரிந்தும், தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இண்டி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. அப்படி இருக்கையில் இந்தக் கூட்டணி எப்படி நாட்டை பாதுகாக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.