தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வரும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. பா.ஜ.க. 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, 3 கட்சிகளும் ஏற்கெனவே தேர்தலை பிரசாரத்தைத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று காலை வெளியிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இன்று காலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ், மாநில மக்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். அதேபோல, தெலங்கானா பி.சி.சி. கட்சி, மாநிலம் முழுவதும் உயர்மட்டத் தலைவர்களின் பஸ் யாத்திரையை தொடங்க உள்ளது. இந்த பஸ் யாத்திரையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர்.

அதேசமயம், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருப்பதாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. அதன்படி, ஹுசூராபாத் (கரீம்நகர்) மற்றும் மகேஷ்வர் (ரங்காரெட்டி) ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.

Tags: Rajnath SinghTelenganaRally
ShareTweetSendShare
Previous Post

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Next Post

முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies