தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!
Sep 26, 2025, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Web Desk by Web Desk
Oct 15, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வரும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. பா.ஜ.க. 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, 3 கட்சிகளும் ஏற்கெனவே தேர்தலை பிரசாரத்தைத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று காலை வெளியிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இன்று காலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ், மாநில மக்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். அதேபோல, தெலங்கானா பி.சி.சி. கட்சி, மாநிலம் முழுவதும் உயர்மட்டத் தலைவர்களின் பஸ் யாத்திரையை தொடங்க உள்ளது. இந்த பஸ் யாத்திரையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர்.

அதேசமயம், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருப்பதாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. அதன்படி, ஹுசூராபாத் (கரீம்நகர்) மற்றும் மகேஷ்வர் (ரங்காரெட்டி) ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.

Tags: Rajnath SinghTelenganaRally
ShareTweetSendShare
Previous Post

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Next Post

முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies