பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
Jul 26, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரை அரங்கேற்றினர். அரை மணி நேரத்திற்குள் கண்மூடித்தனமாக 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்தனர். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், விமானப் படை மூலம் காஸா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

அதேபோல, பீரங்கி மூலமும் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், காலாட்படை வீரர்களும் காஸா நகருக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இத்தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கம் நிலையில், 3,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அதேபோல, காஸா தரப்பில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்டோர் உட்பட 2,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 5,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, காஸா நகரின் முக்கிய மின்நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

இது தவிர, நீர்நிலைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், எவ்வித நிபந்தனையும் இன்றி, ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குட்டரெஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் மத்திய கிழக்கில் அபாயத்தின் விளிம்பில் இருப்பதால், எனக்கு 2 மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன.

முதல் கோரிக்கை ஹமாஸ் அமைப்பினருக்கானது. எவ்வித நிபந்தனையும் இன்றி பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை இஸ்ரேலுக்கானது. காஸாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக மனிதாபிமான உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த 2 நோக்கங்களில் ஒவ்வொன்றும் நிச்சயமாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasUN Chief guterres
ShareTweetSendShare
Previous Post

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies