பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரை அரங்கேற்றினர். அரை மணி நேரத்திற்குள் கண்மூடித்தனமாக 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்தனர். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், விமானப் படை மூலம் காஸா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

அதேபோல, பீரங்கி மூலமும் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், காலாட்படை வீரர்களும் காஸா நகருக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இத்தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கம் நிலையில், 3,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அதேபோல, காஸா தரப்பில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்டோர் உட்பட 2,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 5,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, காஸா நகரின் முக்கிய மின்நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

இது தவிர, நீர்நிலைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், எவ்வித நிபந்தனையும் இன்றி, ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குட்டரெஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் மத்திய கிழக்கில் அபாயத்தின் விளிம்பில் இருப்பதால், எனக்கு 2 மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன.

முதல் கோரிக்கை ஹமாஸ் அமைப்பினருக்கானது. எவ்வித நிபந்தனையும் இன்றி பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை இஸ்ரேலுக்கானது. காஸாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக மனிதாபிமான உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த 2 நோக்கங்களில் ஒவ்வொன்றும் நிச்சயமாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasUN Chief guterres
ShareTweetSendShare
Previous Post

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies