ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!
Jan 14, 2026, 02:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!

காங்கிரஸ் சமரச அரசியலை தொடரும் எனவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமரச அரசியலை தொடரும்.  அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். ஊழல்வாதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாகக் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இரு கட்சிகளும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உணவுச் சங்கிலி போல டெல்லி வரை ஊழல் சங்கிலியை காங்கிரஸ் அரசு உருவாக்கி இருக்கிறது. சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம். அதேபோல, ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்.

பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த ராமன் சிங் ஆட்சிக்கு வந்த (2003-ல்) பிறகு 15 ஆண்டுகளில் வளர்ந்த மாநிலமாக மாறியிருக்கிறது. பெமேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் ஏப்ரல் மாதம் வகுப்புவாத வன்முறையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த புனேஷ்வர் சாஹு கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?

புனேஷ்வர் சாஹுவின் கொலைகாரனை நீதியின் முன்பு நிறுத்துவோம். அவரது தந்தைக்கு தேர்தலில் சீட் கொடுத்திருக்கிறோம். சத்தீஸ்கர் மீண்டும் வகுப்புவாத கலவரத்தின் மையமாக மாற விரும்புகிறீர்களா? புனேஷ்வர் சாஹுவுக்கு நீதி கிடைக்குமா, கிடைக்காதா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாதான மற்றும் வாக்கு வங்கி அரசியலையே தொடரும்.

சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 3-ம் தேதி தாமரை மலரும் என்பதை மக்களின் உற்சாகம் காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தல்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அல்லது எம்.எல்.ஏ.க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக” என்று கூறினார்.

Tags: AmitshaCHATTISGARH
ShareTweetSendShare
Previous Post

காயத்திலும் உதவிய டேவிட் வார்னர் !

Next Post

தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies