ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!

காங்கிரஸ் சமரச அரசியலை தொடரும் எனவும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமரச அரசியலை தொடரும்.  அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். ஊழல்வாதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாகக் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இரு கட்சிகளும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உணவுச் சங்கிலி போல டெல்லி வரை ஊழல் சங்கிலியை காங்கிரஸ் அரசு உருவாக்கி இருக்கிறது. சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம். அதேபோல, ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்.

பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த ராமன் சிங் ஆட்சிக்கு வந்த (2003-ல்) பிறகு 15 ஆண்டுகளில் வளர்ந்த மாநிலமாக மாறியிருக்கிறது. பெமேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் ஏப்ரல் மாதம் வகுப்புவாத வன்முறையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த புனேஷ்வர் சாஹு கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?

புனேஷ்வர் சாஹுவின் கொலைகாரனை நீதியின் முன்பு நிறுத்துவோம். அவரது தந்தைக்கு தேர்தலில் சீட் கொடுத்திருக்கிறோம். சத்தீஸ்கர் மீண்டும் வகுப்புவாத கலவரத்தின் மையமாக மாற விரும்புகிறீர்களா? புனேஷ்வர் சாஹுவுக்கு நீதி கிடைக்குமா, கிடைக்காதா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாதான மற்றும் வாக்கு வங்கி அரசியலையே தொடரும்.

சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 3-ம் தேதி தாமரை மலரும் என்பதை மக்களின் உற்சாகம் காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தல்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அல்லது எம்.எல்.ஏ.க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக” என்று கூறினார்.

Tags: AmitshaCHATTISGARH
ShareTweetSendShare
Previous Post

காயத்திலும் உதவிய டேவிட் வார்னர் !

Next Post

தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies