ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!

காங்கிரஸ் சமரச அரசியலை தொடரும் எனவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமரச அரசியலை தொடரும்.  அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். ஊழல்வாதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாகக் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இரு கட்சிகளும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உணவுச் சங்கிலி போல டெல்லி வரை ஊழல் சங்கிலியை காங்கிரஸ் அரசு உருவாக்கி இருக்கிறது. சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம். அதேபோல, ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்.

பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த ராமன் சிங் ஆட்சிக்கு வந்த (2003-ல்) பிறகு 15 ஆண்டுகளில் வளர்ந்த மாநிலமாக மாறியிருக்கிறது. பெமேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் ஏப்ரல் மாதம் வகுப்புவாத வன்முறையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த புனேஷ்வர் சாஹு கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?

புனேஷ்வர் சாஹுவின் கொலைகாரனை நீதியின் முன்பு நிறுத்துவோம். அவரது தந்தைக்கு தேர்தலில் சீட் கொடுத்திருக்கிறோம். சத்தீஸ்கர் மீண்டும் வகுப்புவாத கலவரத்தின் மையமாக மாற விரும்புகிறீர்களா? புனேஷ்வர் சாஹுவுக்கு நீதி கிடைக்குமா, கிடைக்காதா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாதான மற்றும் வாக்கு வங்கி அரசியலையே தொடரும்.

சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 3-ம் தேதி தாமரை மலரும் என்பதை மக்களின் உற்சாகம் காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தல்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அல்லது எம்.எல்.ஏ.க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக” என்று கூறினார்.

Tags: AmitshaCHATTISGARH
Share
Tweet
SendShare
Previous Post

காயத்திலும் உதவிய டேவிட் வார்னர் !

Next Post

தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies