ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!
Jul 29, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!

காங்கிரஸ் சமரச அரசியலை தொடரும் எனவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமரச அரசியலை தொடரும்.  அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். ஊழல்வாதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாகக் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இரு கட்சிகளும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உணவுச் சங்கிலி போல டெல்லி வரை ஊழல் சங்கிலியை காங்கிரஸ் அரசு உருவாக்கி இருக்கிறது. சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம். அதேபோல, ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்.

பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த ராமன் சிங் ஆட்சிக்கு வந்த (2003-ல்) பிறகு 15 ஆண்டுகளில் வளர்ந்த மாநிலமாக மாறியிருக்கிறது. பெமேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் ஏப்ரல் மாதம் வகுப்புவாத வன்முறையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த புனேஷ்வர் சாஹு கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?

புனேஷ்வர் சாஹுவின் கொலைகாரனை நீதியின் முன்பு நிறுத்துவோம். அவரது தந்தைக்கு தேர்தலில் சீட் கொடுத்திருக்கிறோம். சத்தீஸ்கர் மீண்டும் வகுப்புவாத கலவரத்தின் மையமாக மாற விரும்புகிறீர்களா? புனேஷ்வர் சாஹுவுக்கு நீதி கிடைக்குமா, கிடைக்காதா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாதான மற்றும் வாக்கு வங்கி அரசியலையே தொடரும்.

சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 3-ம் தேதி தாமரை மலரும் என்பதை மக்களின் உற்சாகம் காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தல்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அல்லது எம்.எல்.ஏ.க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக” என்று கூறினார்.

Tags: AmitshaCHATTISGARH
ShareTweetSendShare
Previous Post

காயத்திலும் உதவிய டேவிட் வார்னர் !

Next Post

தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies