பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!
Jul 26, 2025, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற நகரம் காஸா. இந்த நகரை ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 7-ம் தேதி காலை திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இதனால் இஸ்ரேல் திக்குமுக்காடிப்போனது.

எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை மூலம் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழிந்ததோடு, பீரங்கி மற்றும் டாங்கிகளின் மூலம் குண்டுகளை வீசியது. மேலும், இஸ்ரேல் நாட்டின் காலாட் படைகளும் காஸா நகருக்குள் ஊடுருவி ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது.

இப்போர் 12-வது நாளாக இன்றும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்.

அதேபோல, இஸ்ரேல் தரப்பில் 6,500-க்கும் மேற்பட்டோரும், காஸா நகரைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோரும் காயமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், முக்கியத் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவரவாத முகாம்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டன. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந்த பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பிணைக் கைதிகளை விடுவிக்கும்படி வலியுறுத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க முன்வந்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், முக்கிய நிபந்தனை ஒன்றையும் விதித்திருக்கின்றனர். அதன்படி, காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலிய படைகள் நிறுத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Next Post

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies