பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!
Sep 10, 2026, 12:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற நகரம் காஸா. இந்த நகரை ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 7-ம் தேதி காலை திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இதனால் இஸ்ரேல் திக்குமுக்காடிப்போனது.

எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை மூலம் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழிந்ததோடு, பீரங்கி மற்றும் டாங்கிகளின் மூலம் குண்டுகளை வீசியது. மேலும், இஸ்ரேல் நாட்டின் காலாட் படைகளும் காஸா நகருக்குள் ஊடுருவி ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது.

இப்போர் 12-வது நாளாக இன்றும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்.

அதேபோல, இஸ்ரேல் தரப்பில் 6,500-க்கும் மேற்பட்டோரும், காஸா நகரைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோரும் காயமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், முக்கியத் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவரவாத முகாம்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டன. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந்த பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பிணைக் கைதிகளை விடுவிக்கும்படி வலியுறுத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க முன்வந்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், முக்கிய நிபந்தனை ஒன்றையும் விதித்திருக்கின்றனர். அதன்படி, காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலிய படைகள் நிறுத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: WARIsraelHamas
Share
Tweet
SendShare
Previous Post

லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Next Post

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies