அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!
Jun 7, 2025, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவிலுக்கு தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமனம் செய்வதற்கு முன், அறநிலையத்துறை அதிகாரிகள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி பகுதியில் ஆளத்திக்காடு அய்யனார் கோவில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராம கோவில்.

அறங்காவலர்களிடையே எந்த சர்ச்சையும் இல்லை. முறைகேடு நடந்ததாகபுகாரும் இல்லை. ஆனால், கோவிலுக்கு தக்கார் மற்றும் செயல் அலுவலரை நியமித்து சிவகங்கை அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதை இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, தக்காரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடவில்லை.

தக்காரின் பதவிக்காலத்தை வரையறுத்துக் குறிப்பிடவில்லை. எனவே, தக்கார் நியமன உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இரத்து செய்யப்படுகிறது. அறங்காவலர்கள் இல்லாத இடங்களில் தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை அபகரிக்கும் நோக்கில் செயற்கையாக ஒரு சூழ்நிலையை அறநிலையத்துறை உருவாக்கக்கூடாது.

கோவில்களின் நிர்வாகம் மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பதிவு செய்ய இந்நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. அதைத் தொந்தரவு செய்தால், மக்கள் வழக்குத் தொடர அல்லது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். அதை அரசு எதிர்கொள்ள வேண்டும். வழக்கு தொடர்ந்தால் அறநிலையத்துறைக்கு எதிரான வழக்குகளால் நீதிமன்றங்கள் நிரம்பி வழியும். வேலையின்றி இருந்தால், அது தவறான மனநிலையை உருவாக்கும்.

இதனால் ஏற்படும் கொந்தளிப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கும். தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறிது நிதானத்துடன் செயல்பட வேண்டும். இயந்திரத்தனமாக நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.

Tags: Maduraihrnc
ShareTweetSendShare
Previous Post

1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்!

Next Post

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

Related News

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

Load More

அண்மைச் செய்திகள்

நார்வே செஸ்: 7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!

உலகின் முதல் சைவ நகரம்!

400 ட்ரோன், 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல்!

சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையும் அமீர்கான்!

ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!

ஜூன் 27-ம் தேதி வெளியாகும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியீடு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies