அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!
Mar 15, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவிலுக்கு தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமனம் செய்வதற்கு முன், அறநிலையத்துறை அதிகாரிகள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி பகுதியில் ஆளத்திக்காடு அய்யனார் கோவில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராம கோவில்.

அறங்காவலர்களிடையே எந்த சர்ச்சையும் இல்லை. முறைகேடு நடந்ததாகபுகாரும் இல்லை. ஆனால், கோவிலுக்கு தக்கார் மற்றும் செயல் அலுவலரை நியமித்து சிவகங்கை அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதை இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, தக்காரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடவில்லை.

தக்காரின் பதவிக்காலத்தை வரையறுத்துக் குறிப்பிடவில்லை. எனவே, தக்கார் நியமன உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இரத்து செய்யப்படுகிறது. அறங்காவலர்கள் இல்லாத இடங்களில் தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை அபகரிக்கும் நோக்கில் செயற்கையாக ஒரு சூழ்நிலையை அறநிலையத்துறை உருவாக்கக்கூடாது.

கோவில்களின் நிர்வாகம் மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பதிவு செய்ய இந்நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. அதைத் தொந்தரவு செய்தால், மக்கள் வழக்குத் தொடர அல்லது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். அதை அரசு எதிர்கொள்ள வேண்டும். வழக்கு தொடர்ந்தால் அறநிலையத்துறைக்கு எதிரான வழக்குகளால் நீதிமன்றங்கள் நிரம்பி வழியும். வேலையின்றி இருந்தால், அது தவறான மனநிலையை உருவாக்கும்.

இதனால் ஏற்படும் கொந்தளிப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கும். தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறிது நிதானத்துடன் செயல்பட வேண்டும். இயந்திரத்தனமாக நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.

Tags: Maduraihrnc
ShareTweetSendShare
Previous Post

1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்!

Next Post

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies