இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!
Sep 13, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

5-வது தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 02:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இஸ்ரேலுக்கும் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற ஏராளமான இந்தியர்கள், அந்நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆகவே, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் திட்டத்தை இந்தியா கையில் எடுத்தது.

அதன்படி, இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவுக்கு தனி விமானங்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதில், முதல் விமானம் இஸ்ரேலில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை டெல்லியை வந்தடைந்தது. இந்த தனி விமானத்தில் 212 இந்தியர்கள் வந்தனர்.

தொடர்ந்து, 2 மற்றும் 3-வது விமானங்கள் சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் டெல்லியை வந்தடைந்தன. இந்த இரு விமானங்களிலும் 235 மற்றும் 197 இந்தியர்கள் வருகை தந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 4-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இதில், 274 இந்தியர்கள் வருகை தந்தனர். இதன் மூலம் மொத்தம் 918 பேர் இஸ்ரேலில் இருந்து இந்தியா வந்தடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இஸ்ரேலில் இருந்து 5-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 286 இந்தியர்களும், நேபாள் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் வருகை தந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லி விமான நிலையத்தில் தேசியக்கொடியைக் கொடுத்து வரவேற்றார்.

இதன் மூலம் மொத்தம் 1,204 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஆபரேஷன் அஜய் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், தாயகம் திரும்பி விரும்பும் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருக்கிறது.

Tags: L MurugandelhiOperation Ajay5th Flight
Share
Tweet
SendShare
Previous Post

அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!

Next Post

511 திறன் மேம்பாட்டு மையங்களைப் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies