இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

5-வது தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இஸ்ரேலுக்கும் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற ஏராளமான இந்தியர்கள், அந்நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆகவே, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் திட்டத்தை இந்தியா கையில் எடுத்தது.

அதன்படி, இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவுக்கு தனி விமானங்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதில், முதல் விமானம் இஸ்ரேலில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை டெல்லியை வந்தடைந்தது. இந்த தனி விமானத்தில் 212 இந்தியர்கள் வந்தனர்.

தொடர்ந்து, 2 மற்றும் 3-வது விமானங்கள் சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் டெல்லியை வந்தடைந்தன. இந்த இரு விமானங்களிலும் 235 மற்றும் 197 இந்தியர்கள் வருகை தந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 4-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இதில், 274 இந்தியர்கள் வருகை தந்தனர். இதன் மூலம் மொத்தம் 918 பேர் இஸ்ரேலில் இருந்து இந்தியா வந்தடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இஸ்ரேலில் இருந்து 5-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 286 இந்தியர்களும், நேபாள் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் வருகை தந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லி விமான நிலையத்தில் தேசியக்கொடியைக் கொடுத்து வரவேற்றார்.

இதன் மூலம் மொத்தம் 1,204 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஆபரேஷன் அஜய் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், தாயகம் திரும்பி விரும்பும் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருக்கிறது.

Tags: L MurugandelhiOperation Ajay5th Flight
ShareTweetSendShare
Previous Post

அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!

Next Post

511 திறன் மேம்பாட்டு மையங்களைப் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies