அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!
Jul 20, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவிலுக்கு தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமனம் செய்வதற்கு முன், அறநிலையத்துறை அதிகாரிகள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி பகுதியில் ஆளத்திக்காடு அய்யனார் கோவில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராம கோவில்.

அறங்காவலர்களிடையே எந்த சர்ச்சையும் இல்லை. முறைகேடு நடந்ததாகபுகாரும் இல்லை. ஆனால், கோவிலுக்கு தக்கார் மற்றும் செயல் அலுவலரை நியமித்து சிவகங்கை அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதை இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, தக்காரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடவில்லை.

தக்காரின் பதவிக்காலத்தை வரையறுத்துக் குறிப்பிடவில்லை. எனவே, தக்கார் நியமன உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இரத்து செய்யப்படுகிறது. அறங்காவலர்கள் இல்லாத இடங்களில் தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை அபகரிக்கும் நோக்கில் செயற்கையாக ஒரு சூழ்நிலையை அறநிலையத்துறை உருவாக்கக்கூடாது.

கோவில்களின் நிர்வாகம் மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பதிவு செய்ய இந்நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. அதைத் தொந்தரவு செய்தால், மக்கள் வழக்குத் தொடர அல்லது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். அதை அரசு எதிர்கொள்ள வேண்டும். வழக்கு தொடர்ந்தால் அறநிலையத்துறைக்கு எதிரான வழக்குகளால் நீதிமன்றங்கள் நிரம்பி வழியும். வேலையின்றி இருந்தால், அது தவறான மனநிலையை உருவாக்கும்.

இதனால் ஏற்படும் கொந்தளிப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கும். தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறிது நிதானத்துடன் செயல்பட வேண்டும். இயந்திரத்தனமாக நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.

Tags: Maduraihrnc
ShareTweetSendShare
Previous Post

1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்!

Next Post

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

Related News

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies