நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!
Jun 5, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்து, தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒருவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இம்மாதத் தொடக்கத்தில் கோவா மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே, அவரது கணவர் ஸ்டான்லி பிரகன்கா ஆகியோரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்த நாய்க் குட்டி இருப்பதை அறிந்தார்.

இதையடுத்து, நூரி என்று பெயரிடப்பட்ட பெண் நாய்க்குட்டியை வாங்கி வந்த ராகுல் காந்தி, அதை உலக விலங்குகள் தினத்தன்று தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் முகமது ஃபர்ஹான். இவர்தான் நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டதற்காக ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து முகமது ஃபர்ஹான் கூறுகையில், “நாயின் பெயர் எனது மத உணர்வுகளை புண்படுத்துகிறது. ஏனெனில், ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாத்துடன் தொடர்புடையது. மேலும், குரானிலும் நூரி என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, ராகுல் காந்தி நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, ஃபர்ஹானின் வழக்கறிஞர் முகமது அலி கூறுகையில், “ஐ.பி.சி. பிரிவு 295 ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்) சட்டப் பிரிவின் கீழ் ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அவிரல் சிங் நீதிமன்றத்தை அணுகினோம்.

நாயின் பெயர் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள், ராகுல் காந்தியின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்களில் இருந்து ஃபர்ஹானுக்கு தெரியவந்தது. எனவே, நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் ராகுல் காந்திக்கு ஃபர்ஹான் அறிவுறுத்தினார்.

ஆனால், ராகுல் காந்தியிடமிருந்து எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை. எனவே, நவம்பர் 8-ம் தேதி ஃபர்ஹானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. புகாரை விசாரித்த பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பலாம்” என்றார். ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஃபர்ஹான் நீதிமன்றத்தை அணுகியதை, உரிமையியல் நீதிமன்றம் அலுவலகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

Tags: rahul gandhiDog Name nooriAIMIM leaderMove court
ShareTweetSendShare
Previous Post

பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!

Next Post

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

Related News

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies