பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!
Apr 29, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராகப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவாருக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் நடந்த என்.சி.பி. பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், “ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற முன்னாள் பிரதமர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தார். தற்போதைய பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

இதையடுத்து, சரத் பவாரின் கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஸ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சரத் பவாரின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மிகவும் வலிமையானவர்.

ஆகவே, உள் நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த வகையில், இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

அரசியல் கருத்தினால் தேசம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருபோதும் சிதைக்கப்படக் கூடாது. தேசிய பாதுகாப்பு, நமது தேசத்தின் நல்வாழ்வைப் பாதுகாக்கும்போது ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். அரசியல் சார்பு அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் அநாகரிகமான அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் கவலை அளிக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பலமுறை பதவி வகித்தவர், தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் இதுபோன்ற சாதாரணமான பார்வையைக் கொண்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இந்த அழுகிய மனநிலையை நிறுத்த வேண்டும். சரத் பவார் இனியாவது தேசத்தைப் பற்றி முதலில் சிந்திப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Nitin GadkariSharath Pawarstrongly deplores
ShareTweetSendShare
Previous Post

dmk files எக்ஸ்பிரசில் ஏறுகிறதா அல்லது ஜெட்டில் ஏறுகிறதா என்பது விரைவில் தெரியும்!

Next Post

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies