பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!
Sep 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராகப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவாருக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் நடந்த என்.சி.பி. பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், “ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற முன்னாள் பிரதமர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தார். தற்போதைய பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

இதையடுத்து, சரத் பவாரின் கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஸ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சரத் பவாரின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மிகவும் வலிமையானவர்.

ஆகவே, உள் நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த வகையில், இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

அரசியல் கருத்தினால் தேசம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருபோதும் சிதைக்கப்படக் கூடாது. தேசிய பாதுகாப்பு, நமது தேசத்தின் நல்வாழ்வைப் பாதுகாக்கும்போது ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். அரசியல் சார்பு அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் அநாகரிகமான அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் கவலை அளிக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பலமுறை பதவி வகித்தவர், தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் இதுபோன்ற சாதாரணமான பார்வையைக் கொண்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இந்த அழுகிய மனநிலையை நிறுத்த வேண்டும். சரத் பவார் இனியாவது தேசத்தைப் பற்றி முதலில் சிந்திப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Nitin GadkariSharath Pawarstrongly deplores
Share
Tweet
SendShare
Previous Post

dmk files எக்ஸ்பிரசில் ஏறுகிறதா அல்லது ஜெட்டில் ஏறுகிறதா என்பது விரைவில் தெரியும்!

Next Post

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies