பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!
Jul 31, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராகப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவாருக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் நடந்த என்.சி.பி. பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், “ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற முன்னாள் பிரதமர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தார். தற்போதைய பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

இதையடுத்து, சரத் பவாரின் கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஸ் கோயல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சரத் பவாரின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மிகவும் வலிமையானவர்.

ஆகவே, உள் நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த வகையில், இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

அரசியல் கருத்தினால் தேசம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருபோதும் சிதைக்கப்படக் கூடாது. தேசிய பாதுகாப்பு, நமது தேசத்தின் நல்வாழ்வைப் பாதுகாக்கும்போது ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். அரசியல் சார்பு அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் அநாகரிகமான அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் கவலை அளிக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பலமுறை பதவி வகித்தவர், தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் இதுபோன்ற சாதாரணமான பார்வையைக் கொண்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இந்த அழுகிய மனநிலையை நிறுத்த வேண்டும். சரத் பவார் இனியாவது தேசத்தைப் பற்றி முதலில் சிந்திப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Nitin GadkariSharath Pawarstrongly deplores
ShareTweetSendShare
Previous Post

dmk files எக்ஸ்பிரசில் ஏறுகிறதா அல்லது ஜெட்டில் ஏறுகிறதா என்பது விரைவில் தெரியும்!

Next Post

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies