நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!
Apr 29, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்து, தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒருவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இம்மாதத் தொடக்கத்தில் கோவா மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே, அவரது கணவர் ஸ்டான்லி பிரகன்கா ஆகியோரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்த நாய்க் குட்டி இருப்பதை அறிந்தார்.

இதையடுத்து, நூரி என்று பெயரிடப்பட்ட பெண் நாய்க்குட்டியை வாங்கி வந்த ராகுல் காந்தி, அதை உலக விலங்குகள் தினத்தன்று தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் முகமது ஃபர்ஹான். இவர்தான் நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டதற்காக ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து முகமது ஃபர்ஹான் கூறுகையில், “நாயின் பெயர் எனது மத உணர்வுகளை புண்படுத்துகிறது. ஏனெனில், ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாத்துடன் தொடர்புடையது. மேலும், குரானிலும் நூரி என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, ராகுல் காந்தி நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, ஃபர்ஹானின் வழக்கறிஞர் முகமது அலி கூறுகையில், “ஐ.பி.சி. பிரிவு 295 ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்) சட்டப் பிரிவின் கீழ் ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அவிரல் சிங் நீதிமன்றத்தை அணுகினோம்.

நாயின் பெயர் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள், ராகுல் காந்தியின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்களில் இருந்து ஃபர்ஹானுக்கு தெரியவந்தது. எனவே, நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் ராகுல் காந்திக்கு ஃபர்ஹான் அறிவுறுத்தினார்.

ஆனால், ராகுல் காந்தியிடமிருந்து எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை. எனவே, நவம்பர் 8-ம் தேதி ஃபர்ஹானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. புகாரை விசாரித்த பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பலாம்” என்றார். ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஃபர்ஹான் நீதிமன்றத்தை அணுகியதை, உரிமையியல் நீதிமன்றம் அலுவலகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

Tags: rahul gandhiDog Name nooriAIMIM leaderMove court
ShareTweetSendShare
Previous Post

பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!

Next Post

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies