ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!
Sep 6, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறியதாவது, “கடந்த ஆட்சியில், ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும், 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. தற்போது, 26 இலட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, மாட்டுப்பாலில் 8.2 சதவீத இதர சத்துக்கள் மற்றும் 4.3 சதவீத கொழுப்புச் சத்து இருந்ததால், 35 ரூபாய் என அறிவித்தனர். பாலில் சத்து குறைக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு 29 முதல் 32 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 40 ரூபாய் செலவாகிறது. தனியார் நிறுவனங்கள், 36 முதல் 42 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றன.

கேரளாவின் மில்மா நிறுவனம் 46 ரூபாயும், கர்நாடகாவின் நந்தினி நிறுவனம், புதுச்சேரியில் பான்லைட் நிறுவனம் ஆகியவை, 42 ரூபாயும் விலையாகக் கொடுக்கின்றன. இதனால் அண்டை மாநிலங்களுக்கு தினமும், 12 இலட்சம் லிட்டர் பால் செல்கிறது.

குஜராத்தின் அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூரில் கொள்முதல் நிலையங்கள் நிறுவி உள்ளது. ஆவின் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் பலர் தனியார் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பால் அனுப்புகின்றனர்.

ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான வேலூர், மதுரை, மாதவரம் தீவன தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு விட்டன. ஈரோட்டில் மட்டும், தீவன உற்பத்தி நடக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளின் தீவன தேவைக்குத் தனியாரை நம்பும் நிலை உருவாகி உள்ளது.

தமிழகத்தில் தனியார் நிறுவனம் பால் விலை நிர்ணயம் செய்யும் நிலை உருவாகலாம். தற்போது ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்தாமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக, அரசு செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், கொள்முதல் விலை தனியாகவும், ஊக்கத்தொகை தனியாகவும் வழங்கப்படுகிறது. அது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தூத்துக்குடி: அரசு பள்ளியில் தீவிபத்து

Related News

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies