ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறியதாவது, “கடந்த ஆட்சியில், ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும், 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. தற்போது, 26 இலட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, மாட்டுப்பாலில் 8.2 சதவீத இதர சத்துக்கள் மற்றும் 4.3 சதவீத கொழுப்புச் சத்து இருந்ததால், 35 ரூபாய் என அறிவித்தனர். பாலில் சத்து குறைக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு 29 முதல் 32 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 40 ரூபாய் செலவாகிறது. தனியார் நிறுவனங்கள், 36 முதல் 42 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றன.

கேரளாவின் மில்மா நிறுவனம் 46 ரூபாயும், கர்நாடகாவின் நந்தினி நிறுவனம், புதுச்சேரியில் பான்லைட் நிறுவனம் ஆகியவை, 42 ரூபாயும் விலையாகக் கொடுக்கின்றன. இதனால் அண்டை மாநிலங்களுக்கு தினமும், 12 இலட்சம் லிட்டர் பால் செல்கிறது.

குஜராத்தின் அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூரில் கொள்முதல் நிலையங்கள் நிறுவி உள்ளது. ஆவின் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் பலர் தனியார் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பால் அனுப்புகின்றனர்.

ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான வேலூர், மதுரை, மாதவரம் தீவன தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு விட்டன. ஈரோட்டில் மட்டும், தீவன உற்பத்தி நடக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளின் தீவன தேவைக்குத் தனியாரை நம்பும் நிலை உருவாகி உள்ளது.

தமிழகத்தில் தனியார் நிறுவனம் பால் விலை நிர்ணயம் செய்யும் நிலை உருவாகலாம். தற்போது ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்தாமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக, அரசு செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், கொள்முதல் விலை தனியாகவும், ஊக்கத்தொகை தனியாகவும் வழங்கப்படுகிறது. அது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தூத்துக்குடி: அரசு பள்ளியில் தீவிபத்து

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies