ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறியதாவது, “கடந்த ஆட்சியில், ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும், 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. தற்போது, 26 இலட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, மாட்டுப்பாலில் 8.2 சதவீத இதர சத்துக்கள் மற்றும் 4.3 சதவீத கொழுப்புச் சத்து இருந்ததால், 35 ரூபாய் என அறிவித்தனர். பாலில் சத்து குறைக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு 29 முதல் 32 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 40 ரூபாய் செலவாகிறது. தனியார் நிறுவனங்கள், 36 முதல் 42 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றன.

கேரளாவின் மில்மா நிறுவனம் 46 ரூபாயும், கர்நாடகாவின் நந்தினி நிறுவனம், புதுச்சேரியில் பான்லைட் நிறுவனம் ஆகியவை, 42 ரூபாயும் விலையாகக் கொடுக்கின்றன. இதனால் அண்டை மாநிலங்களுக்கு தினமும், 12 இலட்சம் லிட்டர் பால் செல்கிறது.

குஜராத்தின் அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூரில் கொள்முதல் நிலையங்கள் நிறுவி உள்ளது. ஆவின் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் பலர் தனியார் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பால் அனுப்புகின்றனர்.

ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான வேலூர், மதுரை, மாதவரம் தீவன தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு விட்டன. ஈரோட்டில் மட்டும், தீவன உற்பத்தி நடக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளின் தீவன தேவைக்குத் தனியாரை நம்பும் நிலை உருவாகி உள்ளது.

தமிழகத்தில் தனியார் நிறுவனம் பால் விலை நிர்ணயம் செய்யும் நிலை உருவாகலாம். தற்போது ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்தாமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக, அரசு செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், கொள்முதல் விலை தனியாகவும், ஊக்கத்தொகை தனியாகவும் வழங்கப்படுகிறது. அது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தூத்துக்குடி: அரசு பள்ளியில் தீவிபத்து

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies