ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!
Jun 13, 2026, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறியதாவது, “கடந்த ஆட்சியில், ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும், 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. தற்போது, 26 இலட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, மாட்டுப்பாலில் 8.2 சதவீத இதர சத்துக்கள் மற்றும் 4.3 சதவீத கொழுப்புச் சத்து இருந்ததால், 35 ரூபாய் என அறிவித்தனர். பாலில் சத்து குறைக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு 29 முதல் 32 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 40 ரூபாய் செலவாகிறது. தனியார் நிறுவனங்கள், 36 முதல் 42 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றன.

கேரளாவின் மில்மா நிறுவனம் 46 ரூபாயும், கர்நாடகாவின் நந்தினி நிறுவனம், புதுச்சேரியில் பான்லைட் நிறுவனம் ஆகியவை, 42 ரூபாயும் விலையாகக் கொடுக்கின்றன. இதனால் அண்டை மாநிலங்களுக்கு தினமும், 12 இலட்சம் லிட்டர் பால் செல்கிறது.

குஜராத்தின் அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூரில் கொள்முதல் நிலையங்கள் நிறுவி உள்ளது. ஆவின் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் பலர் தனியார் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பால் அனுப்புகின்றனர்.

ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான வேலூர், மதுரை, மாதவரம் தீவன தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு விட்டன. ஈரோட்டில் மட்டும், தீவன உற்பத்தி நடக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளின் தீவன தேவைக்குத் தனியாரை நம்பும் நிலை உருவாகி உள்ளது.

தமிழகத்தில் தனியார் நிறுவனம் பால் விலை நிர்ணயம் செய்யும் நிலை உருவாகலாம். தற்போது ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்தாமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக, அரசு செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், கொள்முதல் விலை தனியாகவும், ஊக்கத்தொகை தனியாகவும் வழங்கப்படுகிறது. அது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தூத்துக்குடி: அரசு பள்ளியில் தீவிபத்து

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies