"நமோ பாரத்" இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Jul 24, 2025, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நமோ பாரத்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை விரைவு இரயில் சேவை (ரேபிடக்ஸ்) மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரயில் சேவைக்கு “நமோ பாரத்” என்று பெயரிடப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லும் இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளிக் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடினார். இந்த இரயில் முதல்கட்டமாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும். மொத்தம் 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இப்பாதையில், தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு இரயில் சேவை முழுமையாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தூரத்தை நமோ பாரத் இரயில் 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், தற்போது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். இத்திட்டம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.

முழுமையாக ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த இரயில், பாதுகாப்பானதாகவும், சொகுசு நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக, இரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக நாளிதழ்கள், புத்தகங்கள் மற்றும் கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டியில் வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்திட்டம் 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Tags: PM ModiInaguratesDelhi-meerutNamo Bhart Express
ShareTweetSendShare
Previous Post

 2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! – அமித்ஷா.

Next Post

தெலங்கானா மாநிலம் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கும்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies