"நமோ பாரத்" இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நமோ பாரத்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை விரைவு இரயில் சேவை (ரேபிடக்ஸ்) மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரயில் சேவைக்கு “நமோ பாரத்” என்று பெயரிடப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லும் இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளிக் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடினார். இந்த இரயில் முதல்கட்டமாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும். மொத்தம் 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இப்பாதையில், தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு இரயில் சேவை முழுமையாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தூரத்தை நமோ பாரத் இரயில் 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், தற்போது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். இத்திட்டம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.

முழுமையாக ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த இரயில், பாதுகாப்பானதாகவும், சொகுசு நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக, இரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக நாளிதழ்கள், புத்தகங்கள் மற்றும் கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டியில் வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்திட்டம் 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Tags: PM ModiInaguratesDelhi-meerutNamo Bhart Express
ShareTweetSendShare
Previous Post

 2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! – அமித்ஷா.

Next Post

தெலங்கானா மாநிலம் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கும்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies