"நமோ பாரத்" இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Apr 29, 2026, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நமோ பாரத்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை விரைவு இரயில் சேவை (ரேபிடக்ஸ்) மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரயில் சேவைக்கு “நமோ பாரத்” என்று பெயரிடப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லும் இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளிக் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடினார். இந்த இரயில் முதல்கட்டமாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும். மொத்தம் 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இப்பாதையில், தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு இரயில் சேவை முழுமையாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தூரத்தை நமோ பாரத் இரயில் 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், தற்போது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். இத்திட்டம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.

முழுமையாக ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த இரயில், பாதுகாப்பானதாகவும், சொகுசு நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக, இரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக நாளிதழ்கள், புத்தகங்கள் மற்றும் கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டியில் வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்திட்டம் 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Tags: PM ModiInaguratesDelhi-meerutNamo Bhart Express
ShareTweetSendShare
Previous Post

 2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! – அமித்ஷா.

Next Post

தெலங்கானா மாநிலம் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கும்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies