2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! - அமித்ஷா.
Jun 14, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! – அமித்ஷா.

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது எனத் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவன (என்சிசிஎஃப்) இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா,
2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடைந்து அதன் மூலம் என்சிசிஎஃப் தன்னிறைவு அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். என்சிசிஎஃப்-பின் மூலதனப் பங்கில் கூட்டுறவு நிறுவனங்களின் விகிதம் அதிகமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களை, உறுப்பினர்களாக மாற்ற என்சிசிஎஃப் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த நோக்கத்திற்காக என்சிசிஎஃப், வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும்  வணிக அணுகுமுறைகளை தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கவும் கடந்த 26 மாதங்களில் 52 முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

என்சிசிஎஃப் தன்னிறைவு பெற்ற கூட்டுறவு நிறுவனமாக மாறுவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கூறினார். அத்தகைய செயல்திட்டத்தை செயல்படுத்துவதில் என்சிசிஎஃப்-க்கு கூட்டுறவு அமைச்சகம்  முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.

வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை வாங்குவதற்கு என்சிசிஎஃப் , தொடக்க வேளாண் கடன் சங்கங்களுடன் (பிஏசிஎஸ்) ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குத் திட்டத்தின் கீழ் அவற்றை இருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றும் அமைச்சர் ஆலோசனை தெரிவித்தார்.

வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்ந்து, அரிசியை கொள்முதல் செய்து தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்இசிஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

என்சிசிஎஃப் தலைவர் விஷால் சிங், மத்திய உள்துறை அமித் ஷா பரிந்துரைத்த யோசனைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஞானேஷ் குமார் மற்றும் என்சிசிஎஃப் மேலாண்மை இயக்குநர் அனிஸ் ஜோசப் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: Amith shacentral government minister
ShareTweetSendShare
Previous Post

ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு அண்ணாமலை நேரில் அஞ்சலி!

Next Post

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies