2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! - அமித்ஷா.
Jul 25, 2025, 05:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! – அமித்ஷா.

Web Desk by Web Desk
Oct 20, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது எனத் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவன (என்சிசிஎஃப்) இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா,
2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடைந்து அதன் மூலம் என்சிசிஎஃப் தன்னிறைவு அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். என்சிசிஎஃப்-பின் மூலதனப் பங்கில் கூட்டுறவு நிறுவனங்களின் விகிதம் அதிகமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களை, உறுப்பினர்களாக மாற்ற என்சிசிஎஃப் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த நோக்கத்திற்காக என்சிசிஎஃப், வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும்  வணிக அணுகுமுறைகளை தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கவும் கடந்த 26 மாதங்களில் 52 முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

என்சிசிஎஃப் தன்னிறைவு பெற்ற கூட்டுறவு நிறுவனமாக மாறுவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கூறினார். அத்தகைய செயல்திட்டத்தை செயல்படுத்துவதில் என்சிசிஎஃப்-க்கு கூட்டுறவு அமைச்சகம்  முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.

வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை வாங்குவதற்கு என்சிசிஎஃப் , தொடக்க வேளாண் கடன் சங்கங்களுடன் (பிஏசிஎஸ்) ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குத் திட்டத்தின் கீழ் அவற்றை இருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றும் அமைச்சர் ஆலோசனை தெரிவித்தார்.

வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்ந்து, அரிசியை கொள்முதல் செய்து தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்இசிஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

என்சிசிஎஃப் தலைவர் விஷால் சிங், மத்திய உள்துறை அமித் ஷா பரிந்துரைத்த யோசனைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஞானேஷ் குமார் மற்றும் என்சிசிஎஃப் மேலாண்மை இயக்குநர் அனிஸ் ஜோசப் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: Amith shacentral government minister
ShareTweetSendShare
Previous Post

ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு அண்ணாமலை நேரில் அஞ்சலி!

Next Post

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies