பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!
Mar 15, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு, இந்தியா சார்பில் 40 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீன நாட்டின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொடூரமான தாக்குதலை அரங்கேற்றினர். காலை நேரத்தில் இஸ்ரேல் இராணுவம் அசந்திருந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தி திணறடித்தனர்.

மேலும், நேரடியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொலை செய்தனர்.  இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா மீது கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் இராணுவம், கடந்த 6 நாட்களாக தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகளும், டாங்கிகளும் காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன.

மேலும், காஸா நகருக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 4,385 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் இராணுவம் 16-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், காஸாவில் பலி எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காஸா நகர மக்கள் குடிக்க தண்ணீர் உட்பட மின்சாரம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எவ்வித அத்தியாவசிப் பொருட்களும் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். அதேபோல, சிகிச்சைக்கு மருந்துப் பொருட்களும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி இருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவியை அனுப்புகிறது! பாலஸ்தீன மக்களுக்கான IAF C-17 விமானம் சுமார் 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டின் எல்-அரிஷ் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.

அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சானிட்டரி பயன்பாடுகள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற பிற தேவையான பொருட்களும் இதில் அடங்கும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில் இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பி இருக்கிறது” என்று தெரிவநித்திருக்கிறார்.

Tags: IndiaPalestineSendsMedical Aid
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Next Post

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies