இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சவூதி அரேபியா அங்கீகரித்துவிடக் கூடாது என்பதுதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி, யூதத் தலைவர்கள் சேர்ந்து இஸ்ரேல் தனி நாடு அறிவிப்பை வெளியிட்டனர். அந்நாட்டை அன்றையதினமே தனி நாடாக அமெரிக்கா அங்கீகரித்தது. தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், அரபு நாடுகள் மட்டும் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக, சவூதி அரேபியா தற்போதுவரை இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், சமீப காலங்களில் இரு நாடுகளும் ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன.

இரு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கி வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபரின் தலைமையில் சவூதி அரேபியாவுடன் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சம்பவத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

அதேபோல, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன. அந்த வகையில், பாலஸ்தீன பொதுமக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சவூதி அரேபியாவும் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான உறவு மீண்டும் நலிவடையத் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குக் காரணம், சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்படக் கூடாது என்று ஹமாஸ் எண்ணியதுதான். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வழி செய்து, நல்லுறவை ஏற்படுத்த முயன்றேன். இஸ்ரேலை தனி நாடாக சவூதி அரேபியா அங்கீகரிக்கவும் முன்வந்தது. ஆனால், வரலாற்று சிறப்புமிக்க அத்தகைய நிகழ்வு நடந்து விடக் கூடாது என்று ஹமாஸ் விரும்புகிறது. இதனால்தான் திடீர் தாக்குதலை நடத்தியது” என்று கூறியிருக்கிறார்.

Tags: americaPresidentJo biden
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Next Post

தரைமட்டமான பட்டாசு குடோன் – தர்மபுரியில் பரபரப்பு

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies