இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 08:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சவூதி அரேபியா அங்கீகரித்துவிடக் கூடாது என்பதுதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி, யூதத் தலைவர்கள் சேர்ந்து இஸ்ரேல் தனி நாடு அறிவிப்பை வெளியிட்டனர். அந்நாட்டை அன்றையதினமே தனி நாடாக அமெரிக்கா அங்கீகரித்தது. தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், அரபு நாடுகள் மட்டும் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக, சவூதி அரேபியா தற்போதுவரை இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், சமீப காலங்களில் இரு நாடுகளும் ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன.

இரு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கி வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபரின் தலைமையில் சவூதி அரேபியாவுடன் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சம்பவத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

அதேபோல, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன. அந்த வகையில், பாலஸ்தீன பொதுமக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சவூதி அரேபியாவும் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான உறவு மீண்டும் நலிவடையத் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குக் காரணம், சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்படக் கூடாது என்று ஹமாஸ் எண்ணியதுதான். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வழி செய்து, நல்லுறவை ஏற்படுத்த முயன்றேன். இஸ்ரேலை தனி நாடாக சவூதி அரேபியா அங்கீகரிக்கவும் முன்வந்தது. ஆனால், வரலாற்று சிறப்புமிக்க அத்தகைய நிகழ்வு நடந்து விடக் கூடாது என்று ஹமாஸ் விரும்புகிறது. இதனால்தான் திடீர் தாக்குதலை நடத்தியது” என்று கூறியிருக்கிறார்.

Tags: americaPresidentJo biden
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Next Post

தரைமட்டமான பட்டாசு குடோன் – தர்மபுரியில் பரபரப்பு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies