இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 08:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தானிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியத் தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரக உயரதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன் பிறகு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்த இந்தியா, நாட்டில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 41 பேரை திரும்பப் பெறுமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, கனடா தனது 41 தூதர்களை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்றது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், வியன்னா ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தற்போது கனடாவில் நமது மக்கள் பாதுகாப்பாக இல்லை. நமது தூதர்களுக்கு பல வழிகளில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்தியா- கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக மோதல்கள் காரணமாக விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

வியன்னா ஒப்பந்தம் மூலம் சமத்துவம் வழங்கப்படுகிறது. இது சர்வதேச விதியாகும். கனேடிய பணியாளர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து எங்களுக்கு கவலைகள் இருந்ததால் நாங்கள் சமத்துவத்தைப் பயன்படுத்தினோம். வியன்னா ஒப்பந்தத்தின்படி இந்திய தூதர்களுக்கு கனடாவில் பாதுகாப்பு வழங்கப்பட்டால் விசா வழங்கலை மீண்டும் துவங்க விரும்புகிறேன். இது மிக விரைவில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கனடாவுக்கு எங்கள் தூதர்கள் வேலைக்குச் செல்வது இனி பாதுகாப்பானது அல்ல” என்றார்.

Tags: CanadaJaishankar
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – முழு விவரம்

Next Post

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies