இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தானிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியத் தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரக உயரதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன் பிறகு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்த இந்தியா, நாட்டில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 41 பேரை திரும்பப் பெறுமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, கனடா தனது 41 தூதர்களை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்றது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், வியன்னா ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தற்போது கனடாவில் நமது மக்கள் பாதுகாப்பாக இல்லை. நமது தூதர்களுக்கு பல வழிகளில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்தியா- கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக மோதல்கள் காரணமாக விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

வியன்னா ஒப்பந்தம் மூலம் சமத்துவம் வழங்கப்படுகிறது. இது சர்வதேச விதியாகும். கனேடிய பணியாளர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து எங்களுக்கு கவலைகள் இருந்ததால் நாங்கள் சமத்துவத்தைப் பயன்படுத்தினோம். வியன்னா ஒப்பந்தத்தின்படி இந்திய தூதர்களுக்கு கனடாவில் பாதுகாப்பு வழங்கப்பட்டால் விசா வழங்கலை மீண்டும் துவங்க விரும்புகிறேன். இது மிக விரைவில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கனடாவுக்கு எங்கள் தூதர்கள் வேலைக்குச் செல்வது இனி பாதுகாப்பானது அல்ல” என்றார்.

Tags: CanadaJaishankar
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – முழு விவரம்

Next Post

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies