இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!
Jul 26, 2025, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தானிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியத் தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரக உயரதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன் பிறகு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்த இந்தியா, நாட்டில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 41 பேரை திரும்பப் பெறுமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, கனடா தனது 41 தூதர்களை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்றது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், வியன்னா ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தற்போது கனடாவில் நமது மக்கள் பாதுகாப்பாக இல்லை. நமது தூதர்களுக்கு பல வழிகளில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்தியா- கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக மோதல்கள் காரணமாக விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

வியன்னா ஒப்பந்தம் மூலம் சமத்துவம் வழங்கப்படுகிறது. இது சர்வதேச விதியாகும். கனேடிய பணியாளர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து எங்களுக்கு கவலைகள் இருந்ததால் நாங்கள் சமத்துவத்தைப் பயன்படுத்தினோம். வியன்னா ஒப்பந்தத்தின்படி இந்திய தூதர்களுக்கு கனடாவில் பாதுகாப்பு வழங்கப்பட்டால் விசா வழங்கலை மீண்டும் துவங்க விரும்புகிறேன். இது மிக விரைவில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கனடாவுக்கு எங்கள் தூதர்கள் வேலைக்குச் செல்வது இனி பாதுகாப்பானது அல்ல” என்றார்.

Tags: JaishankarCanada
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – முழு விவரம்

Next Post

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies