நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!
Oct 5, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, 9-வது நாளான ‘மகா நவமி’யில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சித்திதாத்ரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களைக் குறிக்கும் வகையில், 9 கன்னிப் பெண்களின் கால்களைக் கழுவி கன்யா பூஜை செய்தார்.

மேலும், வேத மந்திரங்கள் முழங்க, சிறுமிகளுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரவாதம் பெற்று, அச்சிறுமிகளின் நெற்றியில் ‘ரோலி திலகம்’ தடவினார். இந்த 9 சிறுமிகள் தவிர, திரளாக வந்திருந்த சிறுமிகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். மேலும், சிறுமிகளின் ஆசிர்வாதத்தைப் பெறும்போது, அவர்களுக்கு தட்சணை மற்றும் பரிசுகளையும் முதல்வர் யோதி ஆதித்யநாத் வழங்கினார்.

பூஜைக்குப் பிறகு, கோரக்நாத் கோவில் சமையலறையில் சமைத்த உணவை யோகி ஆதித்யநாத் தனது கைகளால் சிறுமிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாளை விஜயதசமி பண்டிகை. இது, தர்மம், உண்மை மற்றும் நீதியின் வெற்றித் திருவிழா.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், தீய சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது. மேலும், மனிதகுலத்திற்கு நல்ல வழியைக் காட்டுகிறது” என்றார்.

கன்யா பூஜையின்போது, ​​கோரக்நாத் கோவில் தலைமை அர்ச்சகர் யோகி கமல்நாத், காசியில் இருந்து வந்த மகாமண்டலேஷ்வர் சந்தோஷ் தாஸ் சதுவா பாபா, கலிபாரி மஹந்த் ரவீந்திரதாஸ், கோரக்நாத் கோவில் அர்ச்சகர் ஆச்சார்யா ராமானுஜ் திரிபாதி வேதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: uttar pradeshCm Yogi AdityanathNavratri Festival
ShareTweetSendShare
Previous Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Next Post

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை!

Related News

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலார் ஞானகுரு – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies