நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!
Jul 31, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, 9-வது நாளான ‘மகா நவமி’யில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சித்திதாத்ரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களைக் குறிக்கும் வகையில், 9 கன்னிப் பெண்களின் கால்களைக் கழுவி கன்யா பூஜை செய்தார்.

மேலும், வேத மந்திரங்கள் முழங்க, சிறுமிகளுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரவாதம் பெற்று, அச்சிறுமிகளின் நெற்றியில் ‘ரோலி திலகம்’ தடவினார். இந்த 9 சிறுமிகள் தவிர, திரளாக வந்திருந்த சிறுமிகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். மேலும், சிறுமிகளின் ஆசிர்வாதத்தைப் பெறும்போது, அவர்களுக்கு தட்சணை மற்றும் பரிசுகளையும் முதல்வர் யோதி ஆதித்யநாத் வழங்கினார்.

பூஜைக்குப் பிறகு, கோரக்நாத் கோவில் சமையலறையில் சமைத்த உணவை யோகி ஆதித்யநாத் தனது கைகளால் சிறுமிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாளை விஜயதசமி பண்டிகை. இது, தர்மம், உண்மை மற்றும் நீதியின் வெற்றித் திருவிழா.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், தீய சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது. மேலும், மனிதகுலத்திற்கு நல்ல வழியைக் காட்டுகிறது” என்றார்.

கன்யா பூஜையின்போது, ​​கோரக்நாத் கோவில் தலைமை அர்ச்சகர் யோகி கமல்நாத், காசியில் இருந்து வந்த மகாமண்டலேஷ்வர் சந்தோஷ் தாஸ் சதுவா பாபா, கலிபாரி மஹந்த் ரவீந்திரதாஸ், கோரக்நாத் கோவில் அர்ச்சகர் ஆச்சார்யா ராமானுஜ் திரிபாதி வேதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: uttar pradeshCm Yogi AdityanathNavratri Festival
ShareTweetSendShare
Previous Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Next Post

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies