3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!
Jul 24, 2025, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கைகளை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்கு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அக்டோபர் 27-ம் தேதி கூடுகிறது.

பழைய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா 2023 ஆகியவை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இம்மசோதாக்களை அறிமுகப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த மசோதாவில் மொத்தம் 160 பிரிவுகள் மாற்றப்பட்டு, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட புதிய சட்டங்கள் அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும்.

அதேபோல, யாரையும் தண்டிப்பதே நோக்கமாக இருக்காது. நீதி வழங்குவதே நோக்கமாக இருக்கும். இந்த செயல்பாட்டில், குற்றத்தைத் தடுக்கும் உணர்வை உருவாக்க வேண்டிய இடத்தில் தண்டனை வழங்கப்படும். மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவர்களின் ஆட்சியை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டன. அதோடு, அவர்களின் நோக்கம் தண்டிப்பதே தவிர, நீதி வழங்குவதற்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.

இந்த மசோதாக்களை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்காக, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 7-ம் தேதி கூடுகிறது.

இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக வரும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்குப் பதிலாக 356 பிரிவுகள் இருக்கும். 175 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டு, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதாரச் சட்டத்திற்குப் பதிலாக வரும் பாரதிய சாக்ஷ்யா மசோதாவில் முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக, தற்போது 170 பிரிவுகள் இருக்கும். 23 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, 5 ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Amitshacriminal lawsparliamentary standing committee
ShareTweetSendShare
Previous Post

சவூதி அரேபியா செல்லுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Next Post

தெரு நாய்கள் தாக்கி பிரபல தொழில் அதிபர் மறைவு – முழு விவரம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies