3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கைகளை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்கு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அக்டோபர் 27-ம் தேதி கூடுகிறது.

பழைய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா 2023 ஆகியவை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இம்மசோதாக்களை அறிமுகப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த மசோதாவில் மொத்தம் 160 பிரிவுகள் மாற்றப்பட்டு, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட புதிய சட்டங்கள் அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும்.

அதேபோல, யாரையும் தண்டிப்பதே நோக்கமாக இருக்காது. நீதி வழங்குவதே நோக்கமாக இருக்கும். இந்த செயல்பாட்டில், குற்றத்தைத் தடுக்கும் உணர்வை உருவாக்க வேண்டிய இடத்தில் தண்டனை வழங்கப்படும். மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவர்களின் ஆட்சியை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டன. அதோடு, அவர்களின் நோக்கம் தண்டிப்பதே தவிர, நீதி வழங்குவதற்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.

இந்த மசோதாக்களை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்காக, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 7-ம் தேதி கூடுகிறது.

இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக வரும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்குப் பதிலாக 356 பிரிவுகள் இருக்கும். 175 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டு, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதாரச் சட்டத்திற்குப் பதிலாக வரும் பாரதிய சாக்ஷ்யா மசோதாவில் முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக, தற்போது 170 பிரிவுகள் இருக்கும். 23 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, 5 ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Amitshacriminal lawsparliamentary standing committee
ShareTweetSendShare
Previous Post

சவூதி அரேபியா செல்லுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Next Post

தெரு நாய்கள் தாக்கி பிரபல தொழில் அதிபர் மறைவு – முழு விவரம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies