குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!
Nov 16, 2025, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்துதான் ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. இங்கு இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் மூலம், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்குப் பயன்படும் செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவின் இஸ்ரோ மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு குறைந்த செலவே ஆகிறது. இதனால், பல்வேறு நாடுகளும் இஸ்ரோ வாயிலாகவே செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக, நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊர், புவி வட்டப் பாதைக்கு மிக அருகில் அமைந்திருப்பதும், ராக்கெட் ஏவுதளம் இயங்குவதற்குச் சாதகமான தட்பவெப்ப சூழல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.

இந்த இடங்களைச் சுற்றி தற்போது இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. இந்த சூழலில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்குத் தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும்.

இந்த கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. மாநில அரசும் தேவையான நிலங்களை கையகப்படுத்தி விட்டது. இங்கு சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி டிசம்பர் மாதம் வருகை தருகிறார். ஆகவே, பிரதமர் வருவதற்கு முன்பு தற்காலிக ஏவுதளம் அமைத்து சிறிய ரக குறைந்த எடை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவுவதை பார்வையிடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து விளக்கிக் கூறியிருக்கிறார்.

அதேபோல, ராமேஸ்வரத்தில் பாம்பன் இடையே புதிய இரயில்வே தூக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் துரித கதியில் நடந்து வருகிறது. மேலும், தூர்தன்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இதையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

Tags: PM ModiISROkulasekaranpattinamrocket launch site
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!

Next Post

மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Related News

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies