பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!
Sep 10, 2025, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு சரியான பாடம் கற்பிக்க இஸ்ரேல் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. 18-வது நாளாக நடந்து வரும் இப்போரில் இஸ்ரேலியர்களின் இறப்பைவிட, பாலஸ்தீனியர்களின் இறப்பு 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள அத்தனை உரிமையும் இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேபோல, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டன் நாட்டில் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். இப்பேரணியில் பங்கேற்றவர்கள், ‘ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதுகுறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, ஜிகாத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வார இறுதியில் பிரிட்டன் நகர வீதிகளில் வெறுப்புணர்வை பார்க்க முடிந்தது. பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது யூதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட அச்சுறுத்தல் அல்ல.

பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் சேர்த்து ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது. பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இப்பேரணியின்போது சீர்குலைவு மற்றும் சில வெறுக்கத்தக்க பேச்சுகள் இருந்தன. பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 5 போலீஸார் லேசான காயமடைந்தனர். ஜிகாத்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: britainPM Rishi sunak
ShareTweetSendShare
Previous Post

விமான இன்ஜினை ஆப் செய்ய முயன்ற முன்னாள் பைலட்!

Next Post

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies