பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு சரியான பாடம் கற்பிக்க இஸ்ரேல் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. 18-வது நாளாக நடந்து வரும் இப்போரில் இஸ்ரேலியர்களின் இறப்பைவிட, பாலஸ்தீனியர்களின் இறப்பு 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள அத்தனை உரிமையும் இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேபோல, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டன் நாட்டில் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். இப்பேரணியில் பங்கேற்றவர்கள், ‘ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதுகுறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, ஜிகாத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வார இறுதியில் பிரிட்டன் நகர வீதிகளில் வெறுப்புணர்வை பார்க்க முடிந்தது. பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது யூதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட அச்சுறுத்தல் அல்ல.

பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் சேர்த்து ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது. பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இப்பேரணியின்போது சீர்குலைவு மற்றும் சில வெறுக்கத்தக்க பேச்சுகள் இருந்தன. பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 5 போலீஸார் லேசான காயமடைந்தனர். ஜிகாத்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: britainPM Rishi sunak
ShareTweetSendShare
Previous Post

விமான இன்ஜினை ஆப் செய்ய முயன்ற முன்னாள் பைலட்!

Next Post

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies