பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!
Oct 25, 2025, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு சரியான பாடம் கற்பிக்க இஸ்ரேல் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. 18-வது நாளாக நடந்து வரும் இப்போரில் இஸ்ரேலியர்களின் இறப்பைவிட, பாலஸ்தீனியர்களின் இறப்பு 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள அத்தனை உரிமையும் இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேபோல, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டன் நாட்டில் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். இப்பேரணியில் பங்கேற்றவர்கள், ‘ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதுகுறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, ஜிகாத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வார இறுதியில் பிரிட்டன் நகர வீதிகளில் வெறுப்புணர்வை பார்க்க முடிந்தது. பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது யூதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட அச்சுறுத்தல் அல்ல.

பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் சேர்த்து ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது. பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இப்பேரணியின்போது சீர்குலைவு மற்றும் சில வெறுக்கத்தக்க பேச்சுகள் இருந்தன. பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 5 போலீஸார் லேசான காயமடைந்தனர். ஜிகாத்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: britainPM Rishi sunak
ShareTweetSendShare
Previous Post

விமான இன்ஜினை ஆப் செய்ய முயன்ற முன்னாள் பைலட்!

Next Post

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies