ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இண்டி” ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

தலைநகர் டெல்லியில் துவாரகா செக்டார் 10-ல் உள்ள ராம் லீலா மைதானத்தில் விஜய தசமி மற்றும் தசரா விழா நடைபெற்றது. ஸ்ரீராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில், தலைமை விருந்தினராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது, நீல நிறத்தில் கட்டம் போட்ட காவிக்கலர் சட்டை அணிந்திருந்தார். அதேபோல, காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தலைவர் பர்வேஷ் வர்மா கூறுகையில், “பிரதமர் மோடி இவ்விழாவுக்கு வருகை தந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த முறையும் எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில், ராவணனின் உருவ பொம்மையையும் பிரதமர் எரிப்பார்” என்றார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீமைக்கு எதிரான நன்மையின் அடையாளமாக இப்பண்டிகை திகழ்கிறது. விஜயதசமி நாளான இன்று நம் நாட்டில் ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வணங்குவது எந்த நிலத்தையும் ஆள்வதற்கு அல்ல, நமது சொந்த நிலத்தை காக்கவே. இது ஒரு சாஸ்திர பூஜை.

நிலவில் கால்பதித்து 2 மாதங்களான நிலையில், அதனுடன் இன்று நாம் விஜயதசமியை கொண்டாடுகிறோம். கீதையின் அறிவையும் நாம் அறிவோம். அதேசமயம், ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் தேஜாஸ் ஆகியவற்றை உருவாக்கும் திறனும் நம்மிடம் இருக்கிறது. இன்றைய தினம் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படுவதைக் காணும் அதிர்ஷ்டசாலிகள் நாம். அடுத்த ராமநவமியன்று, அயோத்தியில் ராம்லாலா கோவிலில் எதிரொலிக்கும் ஒவ்வொரு குறிப்பும் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ராமர் கோவிலில் வசிக்க, ராமருக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. ராமரின் கண்ணியம் நாட்டு மக்களுக்குத் தெரியும். அதேபோல, நாட்டின் எல்லையை எப்படி பாதுகாப்பது என்பதும் தெரியும். ஜாதியின் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி செய்கிறது. விரைவில் இந்தியா உலகிலேயே மிகவும் வலுவான ஜனநாயக நாடாக மாறும்” என்றார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Tags: PM ModidelhiDasara Festival
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசின் அலட்சியம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

Next Post

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies